Abstract
Indian Journal of Modern Research and Reviews, 2026; 4(5): 84-86
கேரள - தமிழக மேல்நிலைப்பள்ளி தமிழ்ப் பாடத்திட்டம்
Author Name: முனைவர் பால்ராஜ்., ரா.
Abstract
<p>தமிழ் பாடநூல் கேரள மற்றும் தமிழகத்தில் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதைப் பார்க்கும்போது கற்றல் என்னும் செயல் தனி மனித மேம்பாட்டிற்கும் சமூக நலனுக்கும் அடிப்படையானது. இது இலக்கிய மொழிக் கல்விக்கும் பொதுவானதாகும். மொழிக்கல்வி சுவைபட அமைய வேண்டும் என்பது பொதுவிதியாக சொல்லினும் அது மக்களின் பண்பாடு வரலாறு சார்ந்த ஒழுக்க விழுமியங்களின் சேர்க்கை என்பதை அடிநாதமாக கொண்டு இயங்கக்கூடியதாக அமைய வேண்டும். இவற்றை உள் முகமாக வைத்தே பாடத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன. சமூகத்தின் தேவையை உணர்ந்து முதன்மைக் கற்றல் அடைவுகள் துணைக் கற்றல் அடைவுகள் என கூறுகளாகப் பகுக்கப்பட்டு அதனுடன் ஒன்றிய விடைகளை எழுப்பி செயல்பாடுகளாக மாணவர்களிடம் கொண்டு சேர்க்கின்றன. இதன் விளைவுகளாக நம் சமூகத்தில் மேம்பாடுகளை உணர்ந்து எதிர்காலத்தில் கட்டமைக்கப்பட வேண்டிய கூறுகளை மாணவர்களிடம் வளர்ப்பதே பாடத்திட்டங்களாகும்.</p>
Keywords
நூல் – புத்தகம், கல்விமான் – அறிஞர், பாடம் – பயிற்சி, திட்டம் – ஏற்பாடு
