சங்க இலக்கியம் தமிழரின் பண்டைய வாழ்வியலைப் பதிவு செய்த இலக்கிய ஆவணமாக மட்டுமல்லாமல், மனிதனின் உணர்வு, சிந்தனை, உறவு, கடமை, துயரம், மனஅழுத்தம், சமூக ஆதரவு மற்றும் சூழலோடு கொள்ளும் தொடர்பு ஆகியவற்றையும் நுட்பமாகப் பதிவு செய்த உளவியல் ஆவணமாகவும் விளங்குகிறது. இவ்வகையில் நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடை, கூதிர்க்காலப் பின்னணியில் தலைவன், தலைவி, செவிலியர், தோழியர், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பல்வேறு நடத்தைகளையும் மனநிலைகளையும் வெளிப்படுத்துகிறது.
இவ்வாய்வு நெடுநல்வாடையில் இடம்பெறும் தலைவியின் பிரிவுத் துயரம் Attachment/Separation-related distress, அவளது மனஅழுத்தச் சமாளிப்பு Lazarus and Folkman’s Stress and Coping Theory, செவிலியர் மற்றும் தோழியரின் ஆறுதல் Cohen and Wills’ Social Support and Buffering Hypothesis, தலைவனின் கடமை உணர்வு Maslow’s Self-Actualization Theory, வீரர்களிடம் அவன் காட்டும் பரிவு Bass and Riggio’s Transformational Leadership Theory, கூதிர்க்காலச் சூழலின் நடத்தைத் தாக்கம் Environmental Psychology ஆகியவற்றை கோட்பாடுகளின் அடிப்படையில் ஆராய்கிறது. குறிப்பாக Lazarus and Folkman (1984), Cohen and Wills (1985), Maslow (1987), Bass and Riggio (2006), Gifford (2014) ஆகியோரின் கருத்துகள் முக்கியக் கோட்பாட்டு அடித்தளங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
நெடுநல்வாடை, நக்கீரர், தலைவி, தலைவன், செவிலியர், பிரிவுத் துயரம், மனஅழுத்தம், Coping, Social Support, Self-Actualization, Transformational Leadership, Environmental Psychology.
Dr. S. Gothandaraman. Modern Psychological Theories in Nedunalvaadai நவீன உளவியல் கோட்பாட்டாய்வில் நெடுநல்வாடை. Indian Journal of Modern Research and Reviews. 2026; 4(9):61-69
Download PDF